Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/பணியே நிஜமான தியானம்

பணியே நிஜமான தியானம்

பணியே நிஜமான தியானம்

பணியே நிஜமான தியானம்

ADDED : மார் 31, 2013 10:03 AM


Google News
Latest Tamil News
* அன்பு, அமைதி, உண்மை, சேவை இவையே தியானத்தின் அடையாளங்கள். பேச்சில் மட்டுமல்லாமல் அன்றாட வாழ்விலும் இவற்றை செயல்படுத்துங்கள்.

* காலத்திற்கு மனிதன் கட்டுப்பட்டே ஆக வேண்டும். நேர ஒழுங்கு மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு நாளும் குறித்த நேரத்தில் குறித்த வேலையைச் செய்யுங்கள்.

* கடவுளையே லட்சியமாக சுவாசியுங்கள். அவருக்குள் ஆழ்ந்து விடுங்கள்.

* மவுனமாக கண்மூடி அமர்ந்திருப்பதல்ல தியானம். உணர்வால் கடவுளிடம் ஒன்றுவதே நிஜமான தியானம்.

* உங்கள் பணியை தியானம் போல் மனம் ஒன்றிச் செய்யுங்கள். அது தான் உயர்ந்த தியானம்.

* முதலில் கடவுள், இரண்டாவது உலகம், கடைசியாக நான். இந்த வரிசையில் தான் நம் வாழ்வு அமைந்திருக்க வேண்டும்.

* வேண்டுவது அனைத்தையும் கடவுள் வழங்குவார். எனவே, சரியானதைக் கேட்பதில் எச்சரிக்கையாய் இருங்கள்.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us